tamilnadu

img

கொரோனா தடுப்பூசி 90 சதவிகிதம் பயனுள்ளதாக உள்ளது - ஃபைசர்

ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசி 90 சதவிகிதம் பயனுள்ளதாக உள்ளது என ஃபைசர் கூறியுள்ளது.

நோயாளிகளுக்கு இரண்டு மருந்துகளில் ஏழு நாட்களுக்குப் பிறகும், முதல் 28 நாட்களுக்குப் பிறகு நோயாளிகளுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. 3 கட்ட சோதனைகள் முடிவடைந்த நிலையில் ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசி 90 சதவிகிதம் பயனுள்ளதாக இருக்கிறது என அந்த நிறுவனங்கள் கூறியுள்ளனர்.

கொரோனாவால் உலகளாவிய சுகாதார நெருக்கடி தொடர்கிறது. மக்களுக்கு மிகவும் தேவையான ஒன்றாக தடுப்பூசி மாறியுள்ளது. அதனை பூர்த்தி செய்யும் விதமாக இந்த தடுப்பூசி அமையும் என அந்த நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளது. உலகெங்கிலும், கொரோனா தொற்று விகிதங்கள் அதிகபட்சமாக உயர்ந்து வருகின்றன. மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுகள் அதிகமான தொற்றுகள் மற்றும் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.

விநியோக திட்டங்களின் அடிப்படையில், நிறுவனங்கள் 2020 ஆம் ஆண்டில் உலகளவில் 50 மில்லியன் தடுப்பூசி அளவுகளையும், 2021 ஆம் ஆண்டில் 1.3 பில்லியன் அளவுகளையும் வழங்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.