திருவனந்தபுரம், நவ.24- கேரளத்தில் உள்ள அர சுப்பள்ளிகளை சர்வதேச தரத்துக்கு உயர்த்தும் திட்டத்தின் முதல் கட்டமாக ஆயிரம் பள்ளிகள் சிறப்பான மையங்களாக்கப்பட உள் ளன. அதற்கான மொத்த மதிப்பீடு ரூ.1645 கோடியா கும். வகுப்பறைகளை உயர் தொழில் நுட்பத்துடன்கூடிய வையாக மாற்றும் திட்டத் தின் இரண்டாம் கட்டமும் இதோடு சேர்த்தே நடைபெற உள்ளன. கேரள அரசின் 2017 – 18 பட்ஜெட் அறிவிப்பின் பகுதி யாக, ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ஒரு பள்ளி யை சிறப்பு பள்ளியாக்கும் திட்டத்தின்படி 138 இடங்க ளில் பணிகள் துவங்கின. திரு வனந்தபுரம், கோழிக்கோடு, வயநாடு, காசர்கோடு மாவட்டங்களில் தலா ஒரு பள்ளிக்கூடமும், மலப்புறம், கண்ணூர் மாவட்டங்களி்ல் தலா இரண்டு பள்ளிக்கூடங் களும் பணி முடிந்து திறக்கப் பட்டுள்ளன. பெரும்பாலான இடங்களி் பணிகள் நிறை வடையும் நிலையில் உள் ளன. பள்ளிகளின் அடிப்படை வசதிகளுக்கு தலா ரூ.3 கோடி மதிப்பிலான திட்டம் 213 பள்ளிகளுக்கு வழங்கப் பட்டுள்ளது. இந்த பணிகள் பல இடங்களில் நிறைவடை யும் நிலையில் உள்ளன. 2018- 19 பட்ஜெட்டில் ஆயி ரத்துக்கு மேல் மாணவர்கள் படிக்கும் பள்ளிகளின் வளர்ச்சிக்கு தலா ரூ.3 கோடி வழங்குவதாக அறிவிக்கப் பட்ட திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 166 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. 500க்கும் மேற்பட்டோர் படிக்கும் பள்ளிகளுக்கு தலா ஒரு கோடி ரூபாய் கிப்பி மூலம் வழங்குவதாக அறிவிக்கப் பட்டது. இதில் 446 பள்ளி களுக்கு அரசு அனுமதி அளித் துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளிடமே இந்த கட்டுமான பணிகளுக்கான பொறுப்பு வழங்கப்பட்டுள் ளது. பல்வேறு கட்டங்களாக 966 பள்ளிகளின் கட்டுமான பணிகள் நடைபெற்று வரு கின்றன. 8 முதல் 12 வரை யிலான வகுப்பறைகளை ஹைடெக்காக மாற்றும் திட் டத்திற்கு கிப்பி வழங்கிய ரூ.493.5 கோடியில் ரூ.376. 63 கோடி செலவிடப்பட்டுள்ள தாகவும் கல்வித்துறையினர் தெரிவித்துள்ளனர்.