திருப்பதி, ஜூலை 7- திருப்பதியில் 100 மைக் ரான் அளவு காற்று மாசடைந் துள்ளது. இதனால் ஏற்படும் நச்சு வாயுவால் பக்தர் களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படும் அபாயம் இருப்ப தாக மாசு கட்டுப்பாட்டு வாரி யம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவில் திருமலையில் அமைந்துள்ளது. இங்கு தரி சனம் செய்ய வரும் பக்தர் களுக்காக ஆந்திர மாநில அரசு போக்குவரத்துக்கழ கத்தின் சார்பில் திருப்பதி-திருமலை இடையே தினந் தோறும் 1500 டிரிப்புகள் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதுதவிர பல் வேறு மாநிலங்களில் இருந்து கார், பைக், வேன் என 10 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட வாக னங்கள் திருமலைக்கு வந்து செல்கிறது. இதன் மூலம் தின சரி 70 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை பக்தர்கள் திரு மலைக்கு வருகின்றனர். இந்நிலையில் திருமலை யில் உள்ள காற்று மாசு பாட்டை கண்காணிப்பதற் காக மாநில மாசு கட்டுப்பாட் டுத்துறை சார்பில் கருவி பொருத்தப்பட்டுள்ளது. ஐத ராபாத், தில்லி, விஜயவாடா போன்ற பெருநகரங்களில் 60 மைக்ரான் அளவு காற்று மாசடைந்த நிலையில் திரு மலையில் 100 மைக்ரான் அளவு காற்று மாசடைந்தி ருப்பது தெரியவந்துள்ளது. எனவே, உடனடியாக தேவஸ்தான நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்ய வேண் டும் என மாசு கட்டுப்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது. இல்லையெனில் காற்றில் கலக்கக்கூடிய நைட்ரஜன் ஆக்சைடு நச்சு வாயுவால் திருமலைக்கு வரும் பக்தர் கள் மற்றும் பொதுமக்கள் கடும் உடல் உபாதைகளுக்கு ஆளாகக்கூடிய நிலை ஏற் படும் என்றும் தெரிவித்துள்ள னர். இதுகுறித்து அறங்காவ லர் குழு தலைவர் சுப்பா ரெட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், திருமலை யில் டீசல் வாகனங்களை குறைத்து பேட்டரி வாக னங்களை அதிகப்படுத்தும் விதமாக இலவச பேருந்து கள் அனைத்தும் பேட்டரி வாகனங்களாக மாற்றப்படும் என்றார்.