கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ள நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசம் சிவப்பு மண்டலமாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.18 லட்சம் கடந்துள்ளது; பலி எண்ணிக்கை 3,583 ஆக உயர்ந்துள்ளது. இந்த சூழலில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், இன்று புதியாக இருவருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இந்த சூழலில், ஏற்கனவே ஆரஞ்சு மண்டலமாக இருக்கும் புதுச்சேரி, தொற்று அதிகரித்து வரும் நிலையில், சிவப்பு மண்டலமாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.