tamilnadu

‘பரியேறும் பெருமாள்’ படத்திற்கு புதுச்சேரி அரசின் விருது இயக்குநர் மாரிசெல்வராஜ் பெற்றுக்கொண்டார்

புதுச்சேரி,செப்.14- புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பர த்துறை,   நவதர்ஷன் திரைப்படக்கழகம் மற்றும் அலையன்ஸ் பிரான்சிஸ் இணைந்து நடத்தும் திரைப்படவிழாவில், சிறந்த திரைப்படமாக ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் இந்தாண்டு தேர்வு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதுச்சேரி முருகா திரையரங்கத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவிற்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குநர் வினய்ராஜ் தலைமை தாங்கினார். விழாவில் சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி ‘பரியேறும் பெருமாள் பட இயக்குநர் மாரி செல்வராஜ்க்கு புதுச்சேரி அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருதையும், ரூ. 1லட்சத்திற்கான காசோலையும் வழங்கிப் பாராட்டினார். இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், நவதர்ஷன் திரைப்படகழக செயலர் பழனி, அலையன்ஸ் பிரான்சேஸ் அமைப்பின் தலைவர் டாக்டர் சதீஸ்நல்லாம் உட்பட திரளானேர் பங்கேற்றனர். விருது வழங்கும் விழாவையொட்டி  பரியேறும் பெருமாள் திரைப்பபடம் முன்னதாக  திரையிடப்பட்டது.  இதேப்போல் நகர்கீர்த்தன் (வங்காள படம்),  மலையாளம், தெலுங்கு,  இந்தி உட்பட 5 சிறந்த திரைப்படங்கள் வரும் 17 ஆம் தேதி வரை மாலையில்  6 மணி காட்சியாக முருகா திரையரங்கில் இலவசமாக திரையிடப்படுகிறது.