மக்களை பிளவுபடுத்தும் குடியுரிமை திருத்தச்சட்டத்தை கண்டித்து புதுச்சேரி வடக்கு பிரிவு திமுக சார்பில் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் தலைமை தாங்கினார். மாநில முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். திமுக தெற்கு பிரிவு அமைப்பாளர் ஆர்.சிவா,எம்.எல்.ஏ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.