புதுதில்லி, ஜூன் 8- நாட்டின் பல பகுதிகளிலும் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்க ளுக்கு துல்லியமான மற்றும் பொருத்த மான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி, ஜன நாயக எண்ணம் கொண்ட விவசாய சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்பு களுடன் கலந்துபேசி, மக்களைத் திரட்டி, போராட்டங்களை மேற்கொள்ள வேண் டும் என்று அனைத்துக் கிளைகளுக் கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறை கூவல் விடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் தலைநகர் புது தில்லியில் உள்ள மத்தியக்குழு அலு வலகமான ஏ.கே. கோபாலன் பவனில் ஜூன் 7ஆம் தேதி தொடங்கியது. இது 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இடையே நாட்டில் நிலவும் கடும் வறட்சி நிலை குறித்து மத்தியக்குழு நிறைவேற்றியுள்ள தீர்மானம் வரு மாறு:
நாட்டின் பல பகுதிகள் கடும் வறட்சி யால் கடுமையாகப் பாதிக்கப்பட்டி ருக்கின்றன. ஸ்கைமெட் என்னும் தனி யார் பருவநிலை குறித்துக் கண்காணித் திடும் முகமை (Skymet-private weather monitoring agency)யின் கூற்றுப்படி, கடந்த 65 ஆண்டுகளில் இவ்வாறு இரண்டாவது தடவை கடும் வறட்சி நிலைமை ஏற்பட்டுள்ளது. 2012இல் தொடர் மழைபொழிவு குறைவு காரணமாக மழைநீரின் குறைவு 31 சத வீதம் வரை அதிகரித்தது. இந்த ஆண்டு, பருவகாலங்களுக்கு முன் பெய்திடும் மழை நீரின் அளவு 25 சதவீதம் குறை யும் என்று செய்திகள் கூறுகின்றன. நாட்டிலுள்ள மக்கள் தொகையில் 40 சதவீதத்தினர் அல்லது 50 கோடி (500 மில்லியன்) பேர்களுக்கும் அதிக மாக கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டி ருக்கிறார்கள் என இதுதொடர்பாக ஆய்வு செய்திடும் நம்பத்தகுந்த அமைப்புகள் அபாய எச்சரிக்கையை அறிவித்துள்ளன. ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, மகாராஷ்ட்ரம், கர்நாட கம், பீகார், குஜராத், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களும் மற்றும் இவற்றைச் சுற்றி யுள்ள மேற்கு வங்கம், ராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் மாவட்டங்களும் மிகவும் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளன. நாட்டின் அணைகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரின் அளவும் மிக வும் வீழ்ச்சி அடைந்திருக்கின்றன. மத்திய அரசு, மேலே குறிப்பிட்ட மாநி லங்களில் சிலவற்றிற்கு வறட்சி எச்ச ரிக்கை விடுத்திருக்கிறது. பாஜக தலை மையில் உள்ள மத்திய அரசாங்கம் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்க ளுக்கு நிவாரணம் எதுவும் அளித்திட முன்வரவில்லை. தற்போதுள்ள மிக வும் அதீதமான வறட்சி நிலைமையை தேசியப் பேரிடர் (National calamity) என அறிவித்து, போர்க்கால அடிப்ப டையில் நிவாரண நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட வேண்டும்.
மக்களின் குடிதண்ணீர்த் தேவைக்கும் மற்றும் கால்நடை களுக்கான தீவனங்களுக்கும் கடும் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கி றது. பயிர் விளைச்சலும் கடுமை யான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கி றது. இவற்றின் காரணமாக மக்கள் பல இடங்களில் தங்கள் வாழ்விடங்க ளிலிருந்து புலம்பெயர்ந்து செல்லும் நிலை உருவாகி இருக்கிறது. பல இடங்களில் பட்டினிச் சாவுகள் ஏற்பட்டி ருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. வறட்சி நிலைமை மேலும் சீர்கேடடையக்கூடிய விதத் தில் நிலைமைகள் நீடிக்கின்றன. மத்திய அரசும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின்கீழ் நிலுவை யில் உள்ள ஊதியங்களை உடனடி யாக விடுவித்திட வேண்டும், மாண வர்களின் பள்ளிக் கட்டணங்களைத் தள்ளுபடி செய்திட வேண்டும் மற்றும் நிவாரண உதவிகளை துரிதகதியில் அளித்திட முன்வர வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு துல்லியமான மற்றும் பொருத்தமான நிவாரண நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி, ஜனநாயக எண்ணம் கொண்ட விவ சாய சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளுடன் கலந்துபேசி, மக்க ளைத் திரட்டி, போராட்டங்களை மேற் கொள்ள வேண்டும் என்று அனைத்துக் கிளைகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அறைகூவல் விடுக்கிறது. இவ்வாறு மத்தியக்குழு கோரி யுள்ளது. (ந.நி.)