tamilnadu

img

கிரண்பேடிக்கு மக்கள் பதிலடி: சஞ்சய்தத்

புதுச்சேரி, மே 29-மத்திய அரசுக்கு முகவராக செயல்பட்டு வந்த துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத் கூறினார். புதுச்சேரியில்   அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப் போது, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் புதுச்சேரியில் போட்டியிட்ட காங்கிரஸ், திமுக  வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கும், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.கடந்த மூன்று ஆண்டுகளாக புதுச்சேரி மக்கள் நலத்திட்டங்களை முடக்கி வந்த துணை நிலை ஆளுநருக்கு இந்த மக்களவைத் தேர்தலில், மக்கள் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளார்கள் என்றும் தேர்தல் அறிக்கையில் கூறியபடி மாநில அந்தஸ்து உள்ளிட்ட மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்ற அனைத்து முயற்ச்சிகளையும் எடுப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.முதல்வர் நாராயணசாமி,  காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம், வைத்தி லிங்கம்,எம்.பி., நிர்வாகிகள் சுப்பிரமணியன், தேவதாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;