tamilnadu

img

புதுச்சேரிக்குள் மார்ச் 31 வரை வெளிமாநில வாகனங்கள் நுழைய தடை

புதுச்சேரிக்குள், வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை வெளிமாநில வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை சுய ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில், இன்று முதல் வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்களை காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரிக்குள், வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை வெளிமாநில வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். அண்டை மாநில அரசு வாகங்களுக்கும் அனுமதியில்லை என்றும் அறிவித்துள்ளார்.