tamilnadu

சொகுசு படகு கொள்முதல் முறைகேடு மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணைய விசாரணைக்கு ஆளுநர் பரிந்துரை

புதுச்சேரி, ஆக. 10- சொகுசு படகுகள் வாங்கியதில் முறை கேடு நடந்ததாக கூறப்படும் புகார்கள் தொடர்பாக மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணை யம் விசாரணை நடத்த துணைநிலை ஆளு நர் கிரண்பேடி பரிந்துரை செய்துள்ளார். புதுச்சேரியில் மாநிலத்தில் சுற்று லாவை மேம்படுத்த அரசு பல்வேறு நடவ டிக்கைகளை எடுத்து வருகிறது. சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக புதுவை அரசு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில்  நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழா மில் சுற்றுலா பயணிகள் பாரடைஸ் பீச்சுக்கு சென்றுவர படகுகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் பெருகி வரும் சுற்றுலா பயணி களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் படகு கள் வாங்க திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு  என்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியின் போது சுமார் 2 கோடி ரூபாய் செலவில் 2 சொகுசு படகுகள் வாங்கப்பட்டன. இந்தப் படகுகள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார்  கூறப்பட்டது. இது தொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் பல்வேறு புகார் கள் சென்றன. இந்த புகார்கள் தொடர்பாக மத்திய லஞ்ச  ஒழிப்பு ஆணையம் விசாரணை நடத்த ஆளு நர் கிரண்பேடி பரிந்துரை செய்துள்ளார்.