புதுச்சேரி, ஜூலை 13- தேசிய சராசரியை விட கொரோனா தொற்று பரிசோதனை புதுச்சேரியில் அதிகளவில் செய்யப்படுகிறது என சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 400 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு 600 படுகை வசதி இருந்தாலும் கூட தூய்மை பணியில் சிறு பிரச்னை இருந்து வருகிறது. அதனால் 100 கொரோனா நோயாளிகளை ஜிப்ம ருக்கு மாற்றுவதற்கு கடிதம் அனுப்பியுள்ளேன். அதேபோல் தனியார் மருத்துவக் கல்லூரி களில் அறிகுறி தெரியாத கொரோனா பாசிடிவ் உள்ள 25 நோயாளிகளை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒதியஞ்சாலையில் திங்க ளன்று நடந்த கொரோனா பரி சோதனை முகாமில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வரும் சனிக்கிழமை வரை பரி சோதனை முகாம் நடைபெற உள்ளது.
இதில் இடம் பெறாத பகுதிகளுக்கு அந்தந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் தெரி விக்கும் இடத்தில் பரிசோதனை முகாம்களை நடத்த சுகாதாரத் துறை இயக்குநரிடம் அறிவுறுத்தி யுள்ளேன். நாடு முழுவதும் மக்கள் தொகை அடிப்படையில் சராசரி யாக ஒரு லட்சம் பேரில் 1,505 பேருக்கு கொரோனா பரி சோதனை செய்யப்படுகிறது. ஆனால் புதுச்சேரியில் 2,149 பேருக்கு பரிசோதனை செய்கி றோம். காரைக்காலில் 1,728 பரி சோதனையும், ஏனாமில் 2,354 பரி சோதனையும், மாகேவில் 2,560 பரிசோதனையும் செய்யப்படு கிறது. தேசிய சராசரியை விட அதிகமாக பரிசோதனை செய்து வருகிறோம். இந்த பரிசோத னையை 4 ஆயிரம் வரை உயர்த்த உள்ளோம். பரிசோதனை செய்து கொள்வதற்கு யார் வந்தாலும் திரும்பி அனுப்பப்படுவதில்லை. காய்ச்சல், சளி இருந்தாலும், இல்லாவிட்டாலும் யாருக்காவது சந்தேகம் இருந்தால் வந்து பரி சோதனை செய்து கொள்ளலாம்.
தொற்று எண்ணிக்கை உயர்வு
புதுச்சேரியில் புதிதாக 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலை யில் பாதிக்கப்பட்டோரின் எண் ணிக்கை 1,468ஆக உயர்ந்துள் ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 665ஆகவும், குண மடைந்து வீடு திரும்பியவர்களிப் எண்ணிக்கை 785 ஆகவும் உள்ளது. இறந்தவர்களின் எண் ணிக்கை 18ஆக அதிகரித்துள் ளது. இவ்வாறு அவர் கூறினார்.