tamilnadu

புதுச்சேரி அரசு கேட்ட நிதியை மத்திய அரசு வழங்கவில்லை முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி, ஜூலை 1- புதுச்சேரியில்  ஜூலை 3 முதல் கடைகள்   இரவு 8 மணி வரை திறந்திருக்க அனு மதிக்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி  கூறியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுவையில் மத்திய அரசின் உத்த ரவுப்படி ஜூலை 31ஆம் தேதி வரை ஊர டங்கு தொடரும். ஜூலை 3ஆம் தேதி யில் இருந்து காலை 6 மணி முதல் இரவு 8  மணி வரை அனைத்து கடைகளும் திறந்தி ருக்க அனுமதிக்கப்படும். இரவு பத்து மணியி லிருந்து காலை 5 மணி வரை தொடரும் முழு  ஊரடங்கை மக்கள் முழுமையாக கடைப் பிடிக்க வேண்டும். மக்கள் வெளியே வரும்போது முகக்கவ சம் கட்டாய அணிந்து, தனிமனித இடை வெளியை பின்பற்ற வேண்டும். அனைத்து தொழிற்சாலைகள், நிறுவனங்கள், கோவில்கள்களில் தெர்மல் ஸ்கேன் மூலம்  பரிசோதித்த பின்பே அனுமதிக்க வேண்டும். மத்திய அரசின் அறிவுறுத்தல்படி வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு புதுவையில் தடை இல்லை. அவர்கள் முழு  பரிசோதனைக்கு பின்பு உள்ளே அனு மதிக்கப்படுவார்கள்.

மாநில அரசின் கோரிக்கையை ஏற்று  இலவச அரிசி மேலும் 5 மாதங்களுக்கு வழங்  கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளதை  வரவேற்கிறோம். புதுவைக்குத் தேவை யான கோரிக்கைகள் குறித்து 17 முறை எழு திய கடிதங்களுக்கு பிரதமர் மோடி இது வரை பதில் அளிக்கவில்லை. கொரோனா பரவலைத் தடுக்க மருந்து கள், மருத்துவ உபகரணங்கள் வாங்கவும், மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கவும் புதுவைக்கு கேட்ட ரூ.995 கோடி  குறித்து பிரதமர் பதில் அளிக்காதது வருத்தம்  அளிக்கிறது.  வேலையில்லாமல் இருக்கும்  சிறு, குறு தொழிற்சாலைகளின் தொழிலா ளர்கள்,  இளைஞர்கள்,  அமைப்புசாரா தொழி லாளர்கள், பிற்படுத்தப்பட்டோர்,  பழங்குடி யினர், சுயஉதவிக் குழுவினருக்கு நிதி வழங்க  உதவி கேட்டும் பிரதமர் வழங்கவில்லை.

புதுவைக்கு மார்ச் முதல் ஜூன் வரையி லான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மத்திய  அரசு வழங்கவில்லை.  மத்திய ரிசர்வ் வங்கி யில் மாநில அரசுகள் கடன் பெறுவதற்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்த வேண்டும். கொரோனா பாதிப்பை சமாளிக்க ரூ.20  லட்சம் கோடி திட்டம் என பிரதமர் கூறுகிறார்.  ஆனால், அது வங்கிகள் மூலம் கடன் கொடுப்  பதுதானே தவிர,  புதிய திட்டம் அல்ல. ஏற்கெனவே மத்திய பட்ஜெட்டில் ரூ.30 லட்சம் கோடிக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.  பெட்ரோல், டீசல் விலையை  உயர்த்திவிட்டு அரிசியை கொடுத்தால் மட்டும் போதாது.  ஒவ்வொரு ஏழை குடும்பத்துக்கும் மாதம் ரூ.5,000 வழங்க வேண்டும். மேலும் கடந்த 4 மாதங்களாக புதுவை யின் வருவாய் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது. மத்திய அரசு மாநில அரசுக்கு உதவும் ஒரு நிலையை உருவாக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.