புதுதில்லியில் ரப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தில்லி தொழிற்சாலை பகுதியில் அமைந்துள்ள ரப்பர் தொழிற்சாலையில் பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் குவித்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் எதிர்பாராத விதமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து 26 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த மீட்புக்குழுவினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.