tamilnadu

img

தில்லி விமான நிலையத்தில் வெடிபொருள் கண்டுபிடிப்பு

தில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் வெடிபொருள் இருந்த பை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 
தில்லி சர்வதேச விமான நிலையத்தில் அதிகாலை ஒரு மணியளவில்   3வது முனையத்தில் கருப்பு நிறத்திலான இழுத்துச் செல்ல சக்கரங்கள் பொருத்தப்பட்டிருக்கும் பை ஒன்று பாதுகாப்புப் படை வீரர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.  
இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வெடிகுண்டு பரிசோதனை கருவி மூலம் பரிசோதிக்கப்பட்டதில் அதில் ஆர்டிஎக்ஸ் போன்ற வெடிபொருள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பையை குளிரூட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுமார் 24 மணி நேரம் பையை குளிரூட்டி, பிறகுதான் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதனால் விமான நிலையத்தில் பதற்றமான சூழல் நிலவியது.
 

;