tamilnadu

நாட்டின் அமைதி சீர்குலைப்பு பாஜக அரசு மீது புதுவை முதலமைச்சர் சாடல்

புதுச்சேரி, டிச. 16- குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்து நாட்டின் அமை தியை பாஜக அரசு சீர்குலைத்துள் ளது என்று புதுச்சேரி முதல்வர்  நாராயணசாமி குற்றஞ்சாட்டினார். புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி திங்களனறு (டிச-16) சட்டப் பேரவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,“நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு நடவ டிக்கை எடுக்காமல் மத்திய ஆட்சி யாளர்கள் ஜார்கண்ட் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் ஈடு பட்டுள்ளனர்” என்றார். பொருளாதார மந்த நிலையால்  மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாய் குறைந்  துள்ளது. புதுச்சேரியை பொருத்த வரையில் வாகனங்கள் விற்பனை  குறைந்துள்ள காரணத்தால் வரு வாய் குறைந்துள்ளது. மத்திய அரசு ஜிஎஸ்டி அமல்படுத்தியதால் தர வேண்டிய நிதி 14 சதவீத இழப்பீட்டுத் தொகை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையான இழப்பீட்டுத் தொகை ரூ.380 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும். இது சட்ட ரீதியாக, ஜிஎஸ்டி கவுன்சில் எடுத்த முடிவின்படியும் தரவேண்டிய நிதியாகும்.  இது சம்பந்தமாக மத்திய  அரசை வலியுறுத்த பாஜக ஆட்சி யில் இல்லாத மாநிலங்களான புதுச்சேரி, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், மேற்குவங்கம், தில்லி ஆகிய மாநில முதல்வர்,  அமைச்சர்கள் வீடியோ கான்பி ரன்ஸ் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் தருவது தொடர்பாக திங்  களன்று நடைபெற்ற வீடியோ  கான்பிரன்சிங் மூலம் விவா திக்கப்பட்டது. மேலும் வரும் 18 ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இப்பிரச்சனையை எழுப்பி, நிதி அமைச்சர் ஒத்து ழைக்க கேட்க உள்ளோம் என்றும்  அவர் கூறினார். பற்றி எரிகிறது குடியுரிமை சட்டத்தை எதிர்த்து  நாட்டில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடந்து வருகிறது. அசாம், மேற்குவங்கம், மேகா லயா திரிபுரா போன்ற மாநிலங்கள் பற்றி எரிகின்றது. இந்தியாவில் குடியுரிமை சட்ட மாற்றத்தை கொண்டுவந்து அமைதியை மத்திய ஆட்சியாளர்கள் சீர்கு லைத்துள்ளனர். இது இந்திய அர சியலமைப்புச் சட்டத்திற்கு எதிரா னது என்று கூறியதை ஏற்காமல்,  பெரும்பான்மை உள்ளது என்ற  காரணத்திற்காக அந்த சட்டத்தை இரண்டு அவைகளிலும் நிறை வேற்றி நாட்டின் அமைதியை குலைத்திருக்கின்றனர் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
வரவேற்பு
இம் மாதம் 23 மற்றும் 24 ஆகிய  தேதிகளில் புதுச்சேரிக்கு வருகை  தரும் குடியரசு தலைவர் ராம்நாத்  கோவிந்தை வரவேற்க அரசு தயா ராக உள்ளது எனவும் அவர் கூறினார்.