tamilnadu

img

சீருடையுடன் 8 மணி நேரத்தை தாண்டி போராட்டத்தில் ஈடுபட்ட காவலர்கள் 

தில்லியில் சீருடையுடன் காவலர்கள் 8 மணி நேரத்தையும் தாண்டி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
தில்லி சாகேத் நீதிமன்ற வளாகத்தில் திஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் திங்கட்கிழமையன்று காவல்துறையினருக்கும், வழக்குரைஞர்களுக்கும் இடையே  மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 20 காவலர்கள் மற்றும் 8 வழக்குரைஞர்கள் காயம் அடைந்தனர். 
இன்று தில்லி காவல்துறை தலைமை அலுவலகத்தில் சீருடை அணிந்த காவல்துறையினர் போராட்டத்தில்  ஈடுபட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 2000 காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புமாறு தில்லி காவல்துறை ஆணையர் அமுல்யா பட்னாயக், உத்தரவிட்டுள்ளார். வைத்துள்ளார். இந்நிலையில் தில்லி இந்தியாகேட் உள்ளிட்ட பல பகுதியில் தில்லி காவலர்  துறையினரின் குடும்பத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.