புதுதில்லி:
வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக களமிறங்கிய, முன்னாள் ராணுவ வீரர் தேஜ் பகதூர் யாதவ், தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக, ஏற்கெனவே அறிவித்தபடி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தேர்தல் ஆணையம் என்னுடைய மனுவை உரிய காரணமின்றி நிராகரித்து உள்ளது. எனவே, என்னுடைய வேட்புமனுவை ஏற்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.