tamilnadu

கல்லூரி படிப்புகளுக்கான கலந்தாய்வு: புதுவை கல்வித் துறை அறிவிப்பு

புதுச்சேரி,மே.14-மருத்துவம், பொறியியல், கால்நடை, செவிலியர், கலை படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வுக்கான அறிவிப்பை புதுச்சேரி அரசு செயலர் அன்பரசு வெளியிட்டார்.புதுச்சேரி கல்வித்துறை செயலரும், உயர்கல்வி கலந்தாய்வுக்குழு தலைவருமான அன்பரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-புதுச்சேரி சென்டாக் மூலம் அனைத்து கல்லூரிகளிலும் உள்ள இடங்களையும், இணையதளம் மூலம் ஒரே ஒரு விண்ணப்பத்தின் மூலம் நிரப்புவதற்கான மாணவர்களின் சேர்க்கை முறை கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான அரசு பொறியியல், கலை, விவசாயம், கால்நடை மருத்துவம் ஆகிய கல்லூரிகளுக்கான இடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங் களை பெறுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.புதன்கிழமை (மே 14) காலை 9 மணி முதல் சென்டாக் இணைய தளம் செயல்படத் தொடங்கியது. மாணவர்கள் தங்கள் விண் ணப்பங்களை பூர்த்தி செய்து இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் . இம்மாதம் 25 ஆம் கடைசி தேதியாகும். கடந்த ஆண்டு 6 அரசு கலை கல்லூரிகளில் மட்டும் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய வழி செய்யப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு கூடுதலாக கம்ப்யூட்டர் ஆய்வுக்கூடங் கள் உள்ள 72 அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும், 59 அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் மாணவர்கள் பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு பதிவேற்றம் செய்யும் போது மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.இந்த ஆண்டு மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை சேர்க்க வேண்டிய அவசியமில்லை. தேர்வின் பதிவு எண்ணை மட்டும் பதிவுசெய்திருந்தால் போதுமானது. வருவாய்த்துறையின் நிரந்தர சான்றிதழில் வருமானச்சான்றிதழுக்கு ஆண்டுதோறும் கையொப் பம் பெற வேண்டும். இது மாணவர்களுக்கு சிரமமாக இருப்பதால் தற்போது கையில் இருக்கும் சான்றிதழையே கொடுத்தால் போதும், அதைக் கொண்டு தற்காலிக சேர்க்கை ஆணையை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம். அதேசமயம், ஜூன் இறுதிக்குள் இந்த ஆண்டிற் கான வருமானச் சான்றிதழை வருவாய்த்துறை அலுவலகத்தில் கையப்பம் பெற்றுத் தர வேண்டும். மாணவர்களும், பெற்றோர்களும் வருவாய்த்துறை அலுவலகத்தில் சான்றிதழ் பெறுவதற்காக மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர். இதை தவிர்ப்பதற்காக வரும் ஆண்டில் மதிப்பெண் பட்டியலுக்கான எண்ணை மட்டும் பதிவு செய்வதைப் போல், நிரந்தர இருப்பிட சான்றிதழுக்கும் எண்ணை மட்டும் பதிவு செய்யும் முறையை கொண்டுவர உள்ளோம். ஒரே விண்ணப் பத்தில் பல கல்லூரிகளில் உள்ள பாடங்களை தேர்வு செய்து வழங்க முடியும். ஏற்கனவே இருந்த முறையால் தான் பிறர் சேராமல் தடுக்க முடியும். தற்போதுள்ள முறையில் அதுபோல் தடுத்து வைத்துக் கொள்ள முடியாது. இந்த ஆண்டு தாமதம் ஆனதற்கு தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதும், தகவல் தொழில்நுட்பங் களை சரி செய்வதனா லும்தான் ஏற்பட்டது. அதேசமயம் கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது தாமதம் இல்லை. அடுத்த ஆண்டு சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெளியாகும் தினத்திலேயே சென்டாக் விண்ணப்பங் களை பெறுவதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.