tamilnadu

புதுவையில் காவலருக்கு  கொரோனா தொற்று:  காவல்நிலையம் மூடல்

புதுச்சேரி, ஜூன் 30- காவலருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டதையடுத்து புதுச்சேரி காவல் நிலையம் மூடப்பட்டது. புதுவையில் மேலும் 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 714ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 430ஆகவும் அதிகரித்துள்ளது. இதுவரை 272 பேர் குணமடைந்துள்ளனர். லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் ஒருவர் உயிரிழந்த நிலையில் இறந்தவர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. காவல் நிலையம் மூடல் புதுவை நேரு வீதியில் உள்ள பெரியக்கடை காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த காவல் நிலையம் மூடப்பட்டது. காவல் நிலையத்தின் எதிர்புறம் உள்ள இடத்தில் தற்காலிகமாக காவல் நிலையம் செயல்படுகிறது.