புதுச்சேரி, டிச. 4- சிகப்பு புத்தக நாளை முன் னிட்டு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வாசிப்பு இயக்கம் புதுச்சேரியில் துவங்கப்பட்டது. கரிசல் மேதை யும், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருமான கி.ராஜ நாராயணனின் இல்லத்தில் நடை பெற்ற வாசிப்பு இயக்கத்தை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிர தேச செயலாளர் ஆர்.ராஜாங்கம் துவக்கி வைத்தார். கரிசல் மேதையும், எழுத்தாள ருமான கி. ராஜநாராயணன் கம்யூ னிஸ்ட் கட்சி அறிக்கை பற்றியும், தனது இளமை கால அனுபவங் களையும் மிக விரிவாக பகிர்ந்து கொண்டார். இந்த வாசிப்பு இயக்கத்தில் சிபிஎம் பிரதேச செயற்குழு உறுப் பினர் ராமச்சந்திரன், கட்சியின் கல்விக்குழு உறுப்பினர்கள் நட ராஜன், விஜய் மூர்த்தி, அன்பு மணி, கணேசன்,சதீஷ், நாதன், பச் சையம்மாள் ஆகியோர் பங்கேற்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை வாசித்தனர். கல்விக்குழு ஒருங்கிணைப் பாளர் ஜே. கிருஷ்ணமூர்த்தி பங் கேற்று சிவப்பு புத்தக நாள் பற்றி விளக்கினார். கல்விக்குழு உறுப்பினர் கலியமூர்த்தி அறிக் கையின் முதல் அத்தியாயமான முதலாளிகளும், பாட்டாளிகளும் என்ற அத்தியாயத்தை வாசித்து அதை இன்றைய நிகழ்வுகளோடு விளக்கி பேசினார்.