புதுச்சேரி,ஜூன் 6-மருத்துவப்படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வை புதுச்சேரி, தமிழகத்தில் மத்திய அரசு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிவலியுறுத்தியுள்ளார். முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் நீட் தேர்வு தோல்வியால் 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி, தமிழகத்தில் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.