புதுச்சேரி, மார்ச் 24 - ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வருபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் நாராயண சாமி தலைமையில் செவ்வாய்க் கிழமை (மார்ச் 24) தலைமைச் செயல கத்தில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்க ளின் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்திற்குப் பின்னர் முதல்வர் நாராயணசாமி செய்தி யாளர்களிடம் கூறியதாவது:- கொரோனா நோய் தடுப்பு நட வடிக்கையாக புதுச்சேரியில் மார்ச் 31 ஆம் தேதி வரை வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதுச்சேரி மக்கள் உயிரைப்பற்றி கவலை கொள்ளவில்லை. கொரோனா ஒருவருக்கு வந்தால் அது புதுச்சேரி முழுவதும் பாதிக்கப் படும். எனவே அனைவரும் மாநில அரசோடு ஒத்துழைத்து வீட்டை விட்டு வெளியே வராமல் தனிமையில் இருக்க வேண்டும். குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தவர்களையும் வீட்டிலேயே வைத்து கொள்ள வேண்டும். அத்தியாவசிய பொருட்களை வாங்கும் போது 5 பேருக்கு மேல் சென்று கூட்டமாக நின்று வாங்கக் கூடாது. புதுச்சேரியில் பேரிடர் சட்ட மும், தொற்று நோய் சட்டமும் நடை முறைப்படுத்தியுள்ளோம். யார் வீட்டைவிட்டு வெளியே வந்து அச்சட்டங்களை மீறுகின்றார்களோ அவர்கள் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு ஒருவருட தண்டனை கிடைக்கும் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வரும் 31 ஆம் தேதி வரை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். இதற்கு எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் முழு ஒத்துழைப்பு அளித்துள்ளனர். அமைச்சர்கள் அதிகாரிகளுடன் சேர்ந்து நான்கு பிராந்தியங்களிலும் கண்காணித்து வருகின்றோம். மளிகை கடை, மருந்து கடை, பால், காய்கறி, பழக்கடை இருக்கும். பெட்டிகடை, டீகடை மூடியிருக்க வேண்டும். நகரத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் மக்கள் கும்பலாக கூடுகின்றனர். அதுவும் தடுத்து நிறுத்த காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதற்காக புதுச்சேரி மக்க ளுக்கு மாநில அரசு உதவி செய்வது தொடர்பாக விரைவில் அறி விக்கப்படும். கடந்த ஞாயிற்று கிழமை ஊரடங்கை எப்படி புதுச்சேரி மக்கள் கடைபிடித்து, அமைதி காத்தார்களோ அதேபோல் வீட்டை விட்டு வெளியே வராமல் வரும் 31ம் தேதி வரை இருக்கவேண்டும். தேவைப்பட்டால் வெளிமாநிலத்தில் இருந்து சிஆர்பி காவலர்களை கொண்டுவந்து மக்கள் வெளியே வருவதை தடுத்து நிறுத்தப்படும். பல் மருத்துவ கல்லூரி மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட இருந்த 150 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் குறைவாக இருப்பதாக தெரி விக்கப்பட்டது. இதனால் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி யில் உள்ள 700 படுக்கைகளையும் கொரோனா நோய்க்காக தனி மைப்படுத்தப்பட்ட படுக்கைகளாக மாற்ற நடவடிக்கை எடுத்து வரு கின்றோம். இவ்வாறு அவர் கூறி னார்.