tamilnadu

img

தட்டாஞ்சாவடி எம்எல்ஏ பதவி ஏற்பு

புதுச்சேரி, மே 29-மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் புதுச்சேரி மாநிலத்தில் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவின் கே.வெங்கடேசன் புதனன்று(மே29) சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் துணை பேரவைத் தலைவர் சிவக் கொழுந்து பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத், வைத்திலிங்கம் எம்.பி., திமுக மாநில அமைப்பாளர்கள் எஸ்.பி.சிவக்குமார், சிவா,எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேசச் செயலாளர் ஆர்.ராஜாங்கம், பிரதேசக்குழு உறுப்பினர் தா.முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகிகள் சலீம், விசுவநாதன்,கீதநாதன், சேதுசெல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் தேவ.பொழிலன் உள்ளிட்ட மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டு கே.வெங்கடேசன்,எம்.எல்.ஏ.விற்கு வாழ்த்து தெரிவித்தனர்.