புதுதில்லி:
மக்களவைத் தேர்தலின், 6-ஆவது கட்டமாக, உத்தரப்பிரதேசத்தில் 14 தொகுதிகள், மேற்கு வங்கம், பீகார் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் தலா 8 தொகுதிகள், ஹரியானாவில் 10 தொகுதிகள், தில்லியில் 7 தொகுதிகள் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிகளில் என 59 தொகுதிகளில் மே 12-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. திரிபுரா மேற்கு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 168 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவும், ஞாயிறன்று நடைபெறுகிறது.