tamilnadu

img

புதுச்சேரி: 11 வயது சிறுவன் உட்பட 5 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், 11 வயது சிறுவன் உட்பட 5 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், நேற்று வரை 127 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 75 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், தற்போது புதிதாக 11 வயதுச் சிறுவன் உட்பட மேலும் 5 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. 

பாதிக்கப்பட்டவர்களில் காமராஜ் நகரைச் சேர்ந்த 11 வயது சிறுவன் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையிலும், வில்லியனூரைச் சேர்ந்த 31 வயதுப் பெண் ஜிப்மர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதுபோல் புதுச்சேரியைச் சேர்ந்த 2 பேர் சென்னையில் சிகிச்சையில் உள்ளனர். மாஹே பிராந்தியத்தில் வெளிநாடு சென்று திரும்பிய ஒருவர் சிகிச்சை பெற்று வருகின்றார். தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் உடல் நலமுடன் இருக்கின்றனர்.