கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் புதியதாக 44 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. சிகிச்சையில் உள்ள மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 5 லட்சத்திற்கும் கீலே குறைந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக இதுவரை, 86.36 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 7,800 க்கும் மேற்பட்ட தொற்றுகளுடன், டெல்லி தொடர்ந்து மூன்றாவது நாளிலும் முதலிடத்தில் உள்ளது. உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான தொற்றுகளை சோதனை செய்வதில் இந்தியா இரண்டாவது இடத்து உள்ளது. மொத்த சோதனைகள் 11.96 கோடியாக உள்ளது. நோயெதிர்ப்பு சோதனைகள் 49 சதவிகிதமும், ஆர்டி-பி-சி-ஆர் 46 சதவிகிதமும் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான சோதனைகள் நடத்தப்பட்டாலும், தொற்றுகளின் விகிதம் குறைந்து வருகிறது. அது 7.18 சதவிகிதமாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் கடந்த வாரத்தில் தினசரி தொற்றுகள் விகிதம் 4.2 சதவீதமாக இருந்துள்ளது. இதற்கிடையில், ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் ஆகியவை நவம்பர் மாத இறுதிக்குள் அமெரிக்காவில் தங்கள் கோவிட் -19 கொரோனா தடுப்பூசிக்கு அவசர ஒப்புதல் பெற போதுமான பாதுகாப்புத் தரவை எதிர்பார்க்கின்றன.
கொரோனா தடுப்பூசிக்கு சுகாதார ஊழியர்களின் பெயர்களை பதிவு செய்யும் பணியைத் தொடங்க மகாராஷ்டிரா அரசு, கோவின் என்ற மொபைல் பயன்பாட்டிற்காக பரிந்துரைத்துள்ளது. அடுத்த வாரத்திற்குள் இந்த பயன்பாடு தயாராக இருக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளார்.