tamilnadu

img

புதுவையில் 40 இடங்களில் சூரிய கிரகணத்தை காணலாம்

புதுச்சேரி, டிச. 24- நெருப்பு வளைய சூரிய  கிரகணத்தை திங்களன்று (டிச. 26) காண்பதற்கு புதுச்  சேரியில் 40 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி அறிவியல் இயக்கத்தின் துணைத் தலைவர்கள் தட்ச ணாமூர்த்தி, மதிவாணன், புதுச்சேரி அரசின் அறிவியல் மாமன்ற அதிகாரிகள் சினி வாசராவ், சிவக்குமார் ஆகி யோர் கூட்டாக செய்தியாளர் களிடம் கூறியதாவது: டிசம்பா் 26ஆம் தேதி வானில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரிய உள்ளது. இந்த கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது. இதை, பிரத்யேக கண்ணாடி மூலமாகத்தான் பார்க்க வேண்டும் என வானியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். புதுவையில் தெரிய வுள்ள நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை காண்ப தற்கு புதுச்சேரி கடற்கரை காந்திசிலை, லாஸ்பேட் கோளரங்கம், எளிபேடு மைதானம், வில்லியனூர், பாகூர், காரைக்கால் உள் ளிட்ட 40 இடங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. சூரிய கிரக ணத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது, மக்களிடம் உள்ள மூடநம்பிக்கையை போக்கும் வகையில் இந்த  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிய நிகழ்வை கருப்பு கண்ணாடியில்தான் பார்க்க வேண்டும். சுமார் 400 ஆண்டு களுக்கு ஒரு முறை நிகழக்  கூடியது. இது புதுச்சேரியில் எளிதாக தெரியும். டிசம்பர் 26ஆம் தேதி காலை 8 மணிக்கு துவங்கும் சூரிய  கிரகணம் காலை 11.19 மணி  வரை பிரை வடிவில் காட்சி தரும். புதுச்சேரியில் சரியாக காலை 9.34 மணிக்கு அதிக பட்சமாக கிரகணத்தை கண்டுகளிக்கலாம். இந்த கிரகணத்தின் ஒளி அளவு 0.924 ஆகும். இதனை 88.9  விழுக்காடு காணலாம் என்றார்கள். இதற்கான ஏற்பாடுகளை புதுச்சேரி அறிவியல் இயக் கம், புதுச்சேரி அரசின் அறி வியல் தொழில்நுட்ப மாமன்  றம் அறிவியல் தொழில்நுட் பம் மற்றும் சுற்றுச்சூழல் துறையுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.  இவ்வாறு கூறினார்கள். இச்சந்திப்பின் போது அறி வியல் இயக்க நிர்வாகி ரமேஷ் உடன் இருந்தார்.