திரையரங்குகளை திறப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது இந்நிலையில் தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது வருகிறது.
இதனை தொடர்ந்து, அக்டோபர் 15ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க மத்திய அரசு அனுமதியளித்திருந்தது. இந்நிலையில் திரையரங்குகளை திறப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அவை;
* 50 சதவீத இருக்கைகளில் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும்.
* தகுந்த இடைவெளி விட்டு பார்வையாளர்கள் அமரவேண்டும்.
* கை கழுவுவதற்கான வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.
* பார்வையாளர்களின் வெப்ப நிலையைப் பரிசோதனை செய்யவேண்டும். அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவேண்டும்.
* டிக்கெட் கட்டணத்தை இணையம் வழியாகச் செலுத்த ஊக்குவிக்க வேண்டும்.
* இடைவேளையின்போது பார்வையாளர்கள் வெளியே செல்வதைத் தடுக்க முயற்சி செய்யவேண்டும்.
* பார்வையாளர்கள் எச்சில் துப்ப அனுமதிக்கக் கூடாது.
* திரையரங்கில் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளை மட்டுமே விற்கவேண்டும்.
* பார்வையாளர்களின் தொடர்பு எண்களை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
* ஏ.சி. அளவை 24 முதல் 30 டிகிரி வரை கடைபிடிக்க வேண்டும்.
* கொரோனா விழிப்புணர்வு விடியோக்களை திரையரங்கில் ஒளிபரப்ப வேண்டும்.
* ஒவ்வொரு காட்சிக்குப் பிறகும் திரையரங்கைக் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என வழிகாட்டுதல்களை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.