சென்னை, செப்.5- மருத்துவ காலிப் பணி யிடங்கள் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்தார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறிய தாவது:
போராடிய மருத்துவர்களுக்கு தண்ட னையாக பணியிட மாற்றம் செய்தது அதிமுக அரசு. ஒப்பந்த பணியாளர்களின் பிரச்சனைகளுக்கு கூட தீர்வு காணப்பட்டுள்ளது.
திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் 1947 உதவி மருத்துவர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். 3 ஆண்டுகளில் 6700-க்கும் மேற்பட்ட மருத்துவ காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 3 ஆண்டுகளில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பணியிட மாறுதல் கிடைத்துள்ளது” இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.