tamilnadu

img

சோசலிசமே மாற்று! 1000 இளைஞர்களுடன் சந்திப்பு இயக்கம்

சோசலிசமே மாற்று! 1000 இளைஞர்களுடன் சந்திப்பு இயக்கம்

சோசலிசமே மாற்று! என்ற முழக்கத்தோடு ஆயிரம் இளை ஞர்கள் சந்திப்பு இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கியுள்ளது. மாமேதை காரல் மார்க்ஸ் 142வது நினைவு நாளான வெள்ளியன்று (மார்ச் 14) மாநிலம் முழுவதும் அவரது உருவப்படத்திற்கு மரி யாதை செலுத்தப்பட்டது. மேலும், கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு பிரச்சார இயக்கமும் தொட ங்கப்பட்டது. இதன்ஒருபகுதியாக, மயிலாப் பூர் பகுதியில், ‘சோசலிசமே மாற்று! மற்றதெல்லாம் ஏமாற்று! என்ற முழக்கத்தோடு ஆயிரம் இளைஞர்கள் சந்திப்பு மற்றும் உரையாடல் இயக்கம் தொடங்கப் பட்டது. ராஜா அண்ணாமலைபுரம், காமராஜர் சாலையில் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ்,இளைஞர்களுக்கு துண்டு பிரசுரங்களை கொடுத்து உரையாடல் நடத்தி நிகழ்வை தொடங்கி வைத்தார். மயிலாப்பூர் பகுதிக்குழு உறுப்பி னர் மகேஷ் தலைமையில் நடை பெற்ற இந்த நிகழ்வில் தென் சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், பகுதிச் செய லாளர் ஐ.ஆர்.ரவி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.சரஸ்வதி எம்.சி.எஸ்.ஜெயசங்கரன், பகுதிக்குழு உறுப்பினர்கள் ஜெயச்சந்திரன், அன்புரோஸ், விஜயா, சண்முகம், கிளைச் செயலாளர்கள் ஜோதிபாசு, சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.