tamilnadu

img

புதுச்சேரி:‌ அரசுப் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம்!

புதுச்சேரியில் வரும் ஜூலை 15-ஆம் தேதி முதல் அரசுப் பள்ளிகள் காலை 9 மணியில் இருந்து மாலை 4:20 மணி வரை செயல்பட உள்ளதாக அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. 
புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. அரசுப் பள்ளிகள், தற்போது காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 3.45 மணி வரை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் நேரங்களை மாற்றி கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி, பள்ளி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதன்படி, காமராஜர் பிறந்தநாளான 15-ஆம் தேதி முதல் அரசுப் பள்ளிகள் காலை 9 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 12.25 மணிக்கு இடைவேளை விடப்படுகிறது; இடைவேளைக்கு பிறகு மீண்டும் மதியம் 1.35 மணிக்கு தொடங்கி மாலை 4:20 மணி வரை செயல்பட உள்ளன.