tamilnadu

புதுச்சேரி முக்கிய செய்திகள்

புதுவையில் தடுப்பூசி கட்டாயம்
புதுச்சேரி,ஜன.8- புதுச்சேரி மாநில எல்லைக்குள் வரும் வெளி மாநில மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு தான் அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சி யர் வல்லவன் தெரிவித்து ள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கொரோனா தொற்று தற்போது அதிகரிக்க துவங்கியுள்ளது. தொற்றில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். எனவே புதுச்சேரியில் உள்ள ஓட்டல், மால்கள் திரையரங்குகள், வணிக வளாகங்கள், பெரிய அங்காடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் 50 விழுக்காடு வாடிக்கை யாளர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுவையில் பருவத் தேர்வுக்கு முதல் முறையாக வினாத்தாள் 
புதுச்சேரி, ஜன.8- புதுச்சேரியில் முதன்முறையாக பருவத்தேர்வுகான வினாத்தாள் தயார் செய்யப்பட உள்ளதாக கல்வியமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் “ஜனவரி 19 ஆம் தேதி முதல் நடைபெற உள்ள பருவத்தேர்வுக்கு முதன்முறையாக அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்துக்கும் முதன் முறையாக கல்வித்துறை வினாத்தாளை தயார் செய்கிறது” என்றார். முன்னதாக திரு வள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைபள்ளியில் நடைபெற்ற பெற்றோர், ஆசிரியர் கூட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்று பேசினார்.