tamilnadu

img

வேலையிழந்த பஞ்சாலை, பனியன் தொழிலார்களுக்கு ரீடு பவுண்டேசன் நிவாரணப் பொருட்கள் வழங்கல்

புதுக்கோட்டை, ஆக.17- கொரோனா நோய்த்தொ ற்று ஊரடங்கால் வேலையி ழந்த பஞ்சாலை மற்றும் பனியன் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரீடு பவு ண்டேசன் தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை மாவ ட்டம் அன்னவாசலில் நடை பெற்ற விழாவிற்கு ஒன்றி யக்குழுத் தலைவர் வி.ரா மசாமி தலைமை வகித்தார்.  இதுகுறித்து ரீடு பவு ண்டேசன் நிர்வாகி ராமதாஸ்  தெரிவித்தது: அன்னவாசல் மற்றும்  விராலிமலை ஒன்றியப்பகு திகளில் இருந்து பல்லா யிரக்கணக்கான இளம்பெ ண்கள் திருப்பூர், ஈரோடு,  கோயம்புத்தூர், திண்டு க்கல், கருர் போன்ற பகு திகளில் உள்ள பஞ்சாலை  மற்றும் பனியன் கம்பெனி களில் இடம்பெயர்ந்த தொழி லாளர்களாக பணியாற்றி வரு கிறார்கள். இவர்களின் நல னுக்காகவும், உரி மைகளுக்காகவும் எங்கள் தொண்டு நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், ஊர டங்கால் பாதிக்கப்பட்டு வேலையிழந்த பஞ்சாலை, பனியன் கம்பெனித் தொழி லாளர்களுக்கு அரிசி, மளி கைச்சாமான்கள் போன்ற நிவாரணப்பொருட்கள் பஞ்சாலையில் வேலை செய்யும் 833 இளம்பெண்க ளின் குடும்பத்தினருக்கு வழ ங்கப்பட்டது. மேலும் இப்பகு தியைச் சேர்ந்த பொதுமக்க ளுக்கு தலா 4 வீதம் முக க்கவசங்கள், குளியல்சோப், துவைக்கும் சோப், சானி டைசர் போன்ற சுகா தாரப் பொருட்களும் வழங்க ப்பட்டன. தனிமனித இடைவெ ளியின் அவசியம், முகக்க வசத்தின் முக்கியத்துவம், கை கழுவவேண்டியதன் தே வை மற்றும் கபசுரக்குடிநீர் அருந்துவது, நோய்எதிர்ப்பு திறன்மிக்க உணவுகளை உண்பது போன்றவற்றை வலியுறுத்தியும் தொடர்ந்து கொரோனா விழிப்புணர்வு பணிகளைச் செய்து வரு கிறது என்றார்.