புதுக்கோட்டை, அக்.1- புதுக்கோட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள துணை வட்டாட்சியர் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் உட்பட 13 இடங்களில் வருவாய்த் துறை அலுவலர்கள் செவ்வாயன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் வருவாய்த் துறையில் மொத்தம் உள்ள 54 துணை வட்டாட்சியர் பணியிடங்களில் 38 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. இதனால் பணிகள் பாதிக்கப்படுவதோடு, கூடுதல் பொறுப்புகளைக் கவனிப்போருக்கு பணிச்சுமை ஏற்படுகிறது. காலிப் பணியிடங்களை நிரப்பக்கூடாதென எவ்வித தடை ஆணையும் இல்லை.எனவே, காரணமே இல்லாமலே காலிப்பணியிடங்களை நிரப்பாமல் இருப்பதைக் கண்டித்து கடந்த மாதம் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர், திங்களன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. எனினும், தீர்வு ஏற்படாததால் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவ லர்கள் சங்கத்தினர், ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போரா ட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு சங்கத்தின் வட்டத் தலைவர் தீபன் தலைமை வகித்தார்.
பொன்னமராவதி
பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு பொன்னமராவதி வட்டத் தலைவர் துரை தலைமை வகித்தார். வட்டாரச் செயலாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார் தனி வட்டாட்சியர் சங்கர காமேஸ்வரன், துணை வட்டாட்சியர்கள் வெள்ளை ச்சாமி, பிரகாஷ் இளநிலை உதவியா ளர்கள், அலுவலக உதவியாளர்கள் கலந்து கொண்டனர். இதேபோன்று, மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி, கந்தர்வக்கோட்டை என 12 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் போராட்டம் நடைபெற்றது. ஒரே நேர த்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய்த் துறை அலுவலகங்களிலும் அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட தால் பணிகள் பாதிக்கப்பட்டன.