tamilnadu

img

ஓய்வூதியம் ரூ.3,500 வழங்க வேண்டும் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 புதுக்கோட்டை, ஜூலை 16-  சட்டப்படியான மாத ஓய்வூதியம் ரூபாய் 3 ஆயிரத்து 500 வழங்க வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் புதுக் கோட்டையில் திங்கள்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடத்தி னர். தமிழ்நாடு அரசு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பாக நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் சந்திரா தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாநில துணைத் தலைவர் தேவமணி உரையாற்றினார்.  அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவி யாளர்களுக்கு மத்திய அரசு அறிவித்த ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர்களை துறை சார்ந்த பணிகளை தவிர, மற்ற பணிகளில் ஈடுபடுத்த கூடாது. சட்டப்படியான ஓய்வூதியம் ரூ.3 ஆயிரத்து 500 வழங்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர் பணிகளை தனியாருக்கு தாரைவார்ப்பதை கைவிட வேண்டும். அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்பட்டு உள்ள எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகளை விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட முழக் கங்கள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன. மாவட்டப் பொருளாளர் சாவித்திரி நன்றி கூறினார்.