tamilnadu

img

தங்க மங்கை  அனுராதாவுக்கு பாராட்டு

 புதுக்கோட்டை, ஜூலை 23- காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனை அனுராதாவை புதுக்கோட்டை நகராட்சி அலு வலகக் கூட்டரங்கில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திங்கள் கிழமை வாழ்த்து தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் ஊராட்சி நெம்மேலிப்பட்டியை சேர்ந்த அனுராதா ஆஸ்திரேலியா வில் நடைபெற்ற 15 நாடுகள் பங்கேற்ற காமன்வெல்த் போட்டியில் பளு தூக்கும் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்தார். விரைவில் முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பெறுவதுடன், ஊக்கத் தொகை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். நிகழ்ச்சியில் ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி, கோட்டாட்சி யர் தண்டாயுதபாணி, நகராட்சி ஆணையர்(பொ) ஜீவா சுப்பிரமணியன், மாவட்ட விளையாட்டு அலுவலர் மாலதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

;