tamilnadu

அரசு மருத்துவமனைக்கு ஜெனரேட்டர் வழங்கல்

பொன்னமராவதி, மார்ச் - புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே உள்ள வலையபட்டி பாப்பாயி ஆச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ.6 லட்சம் மதிப்புள்ள 40 கேவி திறன் கொண்ட ஜெனரேட்டரை மேலைச்சிவபுரியை சேர்ந்த மருந்து உற்பத்தி நிறுவன தொழில் அதிபர் கே.ஆர் செல்வராமு வழங்கினார். மருத்துவமனையின் முன்னாள் தலைமை மருத்துவர் எம்.சின்னப்பா தலைமை வகித்தார்.  தலைமை மருத்துவர் ச.செந்தமிழ்ச்செல்வி வரவேற்புரையாற்றினார். தொழிலதிபர்கள் கே.ஆர்.செல்வராமு, கே.ஆர்.எஸ்.காசி ஆகியோர் ஜெனரேட்டரை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர். மருத்துவர்கள் மார்சல் பிரதாப், கண்ணன், கிருபா சங்கர், சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் கலந்து கொண்டனர். ஆய்வக நுட்புனர் செந்தில் நன்றி கூறினார்.

;