அறந்தாங்கி, நவ.19- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் அத்தாணி பகுதி வெள்ளாற்றில் மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில் வட்டாட்சியர் சூரிய பிரபு, சரக வருவாய் ஆய்வாளர் மதியழகன், கிராம உதவியாளர் ஆகியோர் திங்கள் இரவு அப்பகுதியில் ரோந்து சென்ற போது அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த இரண்டு லாரிக ளை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய டிரைவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.