tamilnadu

img

ஆடு அடிக்கும் தொட்டிக்கு அரசு நிர்ணயித்த கட்டணம் வசூலிக்கக் கோரிக்கை

பொன்னமராவதி, ஜூன் 21- பொன்னமராவதியில், இறைச்சி கடை உரிமையாளர் மற்றும் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) கிளை அமைப்பு கூட்டம் பி.சேக் முகமது தலைமையில் நடைபெற்றது. சிஐ டியு மாவட்ட  செயலாளர் ஸ்ரீதர் சிறப்புரை யாற்றினார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் என்.பக்ருதீன், சிஐடியு மாவட்ட துணை செய லாளர் ஏ.தீன், சிபிஎம் ஒன்றிய குழு உறுப்பி னர்கள் கே.குமார், சாத்தையா கலந்து கொண்டனர். சங்கத்தின் புதிய தலைவராக எஸ்.அப் பாஸ், செயலாளராக என்.ரபீக், பொருளா ளராக பி.சேக் உள்ளிட்டோர் தேர்வு செய்யப் பட்டனர். கூட்டத்தில், பொன்னமராவதி ஆடு அடிக்கும் தொட்டிக்கு அரசு நிர்ண யித்த கட்டணத்தை மட்டுமே வசூல் செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், அத்தொட்டியை பேரூராட்சி நிர்வாகம் தினந்தோறும் சுத்தப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.