tamilnadu

ஓட்டலில் தரமற்ற உணவு விற்பனை புகார்  

 புதுக்கோட்டை, நவ.2- புதுக்கோட்டை செல்லப்பாநகர் பகுதியை சேர்ந்தவர் கீதா. இவர் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள இன்பலா ஓட்டலில் சிக்கன் பிரியாணி வாங்கி வீட்டிற்கு கொண்டு சென்று உள்ளார். வீட்டிற்கு சென்று சிக்கன் பிரியாணியை பிரித்து பார்த்தப்போது, சிக்கன் கெட்டுபோன நிலையில் இருந்தது. இதைக்கண்ட அதிர்ச்சி அடைந்த கீதா கெட்டுப்போன சிக்கன் பிரியாணியுடன் ஒட்டலுக்கு வந்து, அங்கு பணியாற்றி ஊழியர்களிடம் இது குறித்து கேட்டு உள்ளார்.  ஆனால் அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து கீதா புதுக்கோட்டையில் உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் மாவட்ட நியமன அதிகாரி ரமேஷ்பாபுவிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் மாவட்ட நியமன அதிகாரி ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சம்மந்தப்பட்ட ஓட்டலில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஓட்டலில் கெட்டுப்போன உணவு பொருட்கள் விற்பனை செய்ததை அதிகாரிகள் உறுதி செய்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட நியமன அதிகாரி ரமேஷ்பாபு மாவட்ட வருவாய் அதிகாரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.