tamilnadu

img

நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி

 புதுக்கோட்டை, செப்.19- புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் டி.ரவிச்சந்திரன் தலைமை யேற்றார். பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் ஏ.மாமுண்டி, அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் டாக்டர் சரவணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக ரோட்டரி சங்கச் செயலாளர் வெங்கட சுப்பிரமணியன் வரவேற்க வழக்கறிஞர் எம். செந்தில் குமரர் நன்றி கூறினார். பள்ளியின் துணைமுதல்வர் குமார வேல் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

;