tamilnadu

img

புதுக்கோட்டை: பட்டியலின மாணவரை தாக்கிய 6 பேர் மீது வழக்குப்பதிவு

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பட்டியலின மாணவரை கடத்திச் சென்று தாக்கிய 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள தீர்த்தானிபட்டி கிராமத்தில், மழையூர் அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் பாலமுருகன் என்ற பட்டியலின மாணவரை அதே பகுதியை சேர்ந்த சாதி ஆதிக்க பிரிவை சேர்ந்த இளைஞர்களால் கடத்திச் சென்று தாக்கப்பட்டுள்ளார். காயமடைந்த மாணவர் சிகிச்சைக்கான புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், மாணவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து, அங்கு விரைந்த காவல்துறையினர் மாணவரை தாக்கிய 6 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.