புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 5-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா இன்று முதல் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் நடைபெறுகிறது.
வெள்ளியன்று நடைபெற்ற தொடக்க விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமை வகித்தார். சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி புத்தக திருவிழாவை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சின்னதுரை புத்தக திருவிழாவை வாழ்த்தி பேசினார்.இவ்விழாவில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அறிவியல் இயக்கப் பொறுப்பாளர்கள் உரையாற்றினர். மேலும், இந்நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஆகஸ்ட்-7 ஆம் தேதிவரை வரை நடைபெறும் இப்புத்தக திருவிழாவில் , 60க்கும் மேற்பட்ட முன்னணிப்பதிப்பகங்களுடன், 100 அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. தினந்தோறும் பல்வேறு தலைப்புகளில் சிறப்பு விருந்தினர்களின் சொற்பொழிவு நிகழ்வுகளும், பள்ளி , மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. இது புதுக்கோட்டை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.