tamilnadu

img

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல்

 பொன்னமராவதி: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டார வளமைய அலுவல கத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. ஒன்றிய கவுன்சிலர் அ.அடைக்கலைமணி தலைமை வகித்தார். ஆசிரியர் பயிற்றுநர் பரிசுத்தம் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர்கள் ராஜாசந்திரன், பால்டேவிட் ரொசாரியோ, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வள  மேற்பார்வையாளர் செல்வகுமார் உரை நிகழ்த்தினார். மாற்றுத்திறன் கொண்ட 18 மாணவர்க ளுக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.