tamilnadu

ஈழுவா, தியா சமுதாய மக்கள் பிற்படுத்தப்பட்டோர் சாதிச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை, மே 20- ஈழுவா மற்றும் தியா சமுதாய மக்களுக்கு பிற்படுத்தப் பட்டோர் சாதிச் சான்றிதழ் வழங்குவதற்கான கோரிக்கை கள், முறையீடுகள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்.  இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி, புதுக்கோட்டை மாவட்டத்தில், ஈழுவா மற்றும் தியா சமுதாய மக்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரும் முறையீடுகளை ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கக் கோரி பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நாள் 21.04.2020-ல் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளரை தலைவராக நியமித்து நான்கு உறுப்பினர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.    மேற்படி பொருள் தொடர்பாக குழுவிற்கு கோரிக்கை கள், முறையீடுகள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்க விரும்பு வோர் 26.5.2020-க்குள் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் அல்லது குழுவின் உறுப்பினர் செயலர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்குநர், எழிலகம் விரிவாக்கக் கட்டடம், 2-ம் தளம், சேப்பாக்கம், சென்னை-5-க்கு எழுத்துப் பூர்வமாக தபால், மின்னஞ்சல் (dir-combc@tn.gov.in / dbcmwo.tnpdk@nic.in) மூலமாக அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.