புதுக்கோட்டை, செப்.10- புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஆதிதிரா விடர் நல அரசு தொடக்கப் பள்ளியில் 2 ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென வலியுறுத்தி மாண வர்களுடன் பெற்றோர் செவ்வாய்க் கிழமையன்று சாலை மறியலில் ஈடு பட்டனர். கறம்பக்குடி தாலுகா குளந்தி ரான்பட்டு ஊராட்சி பள்ளத்தான் மனை யில் உள்ள ஆதிதிராவிடர் நல அரசு தொடக்கப் பள்ளியில் 45 மாணவர்கள் பயில்கின்றனர். இங்கு தலைமை ஆசி ரியர் மற்றும் இரு ஆசிரியர் பணி யிடங்களில் தலைமை ஆசிரியர் மட் டுமே பணியில் உள்ளார். 2 ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இது குறித்து பல முறை புகார் தெரி வித்தும் கல்வித் துறை மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர்கள் முறையாக நடவடிக்கை எடுக்க வில்லையாம். ஆசிரியர்கள் நியமிக்கப் படாததால் மாணவர்களின் கல்வித் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வந் துள்ளது. இதைக் கண்டித்தும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென வலியுறுத்தியும் பள்ளத்தான்மனை பகுதி மக்கள் பள்ளி மாணவர்களுடன் கறம்பக்குடி சீனிகடை முக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அறந்தாங்கி ஆதிதிராவிடர் நல அலுவலர் பவானி, ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்து ராஜா உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடு பட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர். அப்போது, விரைவாக ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து போராட் டத்தை ஒத்திவைத்தனர்.