அறந்தாங்கி, மே 13- திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் 144 தடை உத்தரவை மீறி மீன்கடை போடக் கூடாது என்று சுகாதார ஆய்வாளர் வெங்கடாச்சலம் அறிவுறுத்தி வந்துள்ளார். இதனை ஏற்க மறுத்த கல்விப்பிரியன் என்பவர் சுகாதார ஆய்வாளர் வெங்கடாச்சலத்தை பட்டாக்கத்தியால் வெட்டி தாக்கினார். உடன் வெங்கடாச்சலம் இருசக்கர வாகனம் மூலம் அங்கிருந்து தப்பியுள்ளார். இந்தக் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானதையடுத்து சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்ய வலியுறுத்தி அறந்தாங்கி நகராட்சி அலுவலர்கள் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். நகராட்சி ஆணையர் முத்துகணேஷ் (பொறுப்பு) தலைமையில் அலுவலர்கள், தாக்குதல் நடத்திய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.