புதுக்கோட்டை, செப்.10- பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் நடை பெறும் பல்வேறு கட்டப் போராட்டங்க ளில் திரளான சத்துணவு ஊழியர்கள் பங்கேற்க முடிவெடுக்கப்பட்டது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலை வர் ச.காமராஜ் தலைமையில் புதுக்கோட்டையில் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. நடைபெற்ற வேலைகள் குறித்து மாவட்டச் செயலா ளர் பெ.அன்பு பேசினார். மாவட்ட நிர்வாகிகள் துரை.அரங்கசாமி, கு.ராஜமாணிக்கம், சீத்தாலெட்சுமி, கிருஷ்ணவேணி, கே.மீனாம்பாள், ஏ.லெட்சுமணன், பொ.சிங்காரம் கரு ணாநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஜாக்டோ-ஜியோ சார்பில் செப்.13 அன்று மாவட்ட அளவில் நடைபெறும் பேரணியிலும், செப.17 அன்று நடை பெறும் போராட்ட விளக்கப் பேரவை யிலும், செப்.24 அன்று நடைபெறும் மாவட்ட அளவிலான உண்ணாவிரதப் போராட்டத்திலும் திரளான சத்துணவு ஊழியர்களைப் பங்கேற்கச் செய்வது, அக்டோபர் 16 அன்று சத்துணவு ஊழி யர் சங்கம் சார்பில் போராட்ட ஆயத்த மாநாட்டை நடத்துவது, நவம்பர் 26 அன்று மாவட்ட அளவில் சாலைமறி யல் போராட்டம் நடத்துவது எனத் தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது.