tamilnadu

img

புதுக்கோட்டை அருகே இடிதாக்கி 4 பெண்கள் பலி

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அருகே செம்பாட்டூரில் இடி விழுந்ததில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதல் விட்டு விட்டு தொடர் மழை பெய்து கொண்டிருந்தது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் வைத்தூர் கிராமத்திலிருந்து அருகே உள்ள செம்பாட்டூர் கீழமுட்டுக்காடுக்கு 38 பெண்கள் விவசாய கூலி வேலைக்காக சென்றுள்ளனர். அப்போது விவசாய நிலத்தில் கடலை பறிக்கும் பொழுது பலத்த மழை பெய்துள்ளது. இதனையடுத்து அருகே தார்ப்பாய் அமைத்தகூடாரத்தில் மழைக்காக ஒதுங்கி நின்றுள்ளனர்.அப்போது திடீரென மின்னலுடன் கூடிய இடி தாக்கி உள்ளது, இதில் சம்பவ இடத்திலேயே 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இதில் 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு புதுக்கோட்டைஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மேலும் இரண்டுபெண்கள் இறந்து விட்டனர். விஜயா, சாந்தி, லட்சுமி அம்மாள், கலைச்செல்வி ஆகிய நான்கு பெண்கள் இடி தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தகளாவார்.

மேலும், படுகாயமடைந்த 20 பேர் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இடி தாக்கியதில் காயமடைந்த விவசாய பெண்களையும் உயிரிழந்த விவசாய பெண்களின் உறவினர்களையும் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வந்து நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறியதோடு மருத்துவர்களிடம் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.இதன் பிறகு செய்தியாளர்ளிடம் பேசியஆட்சியர் உமா மகேஸ்வரி, உயிரிழந்த மற்றும்காயமடைந்த பெண்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பரிந்துரைக்கப்பட்டு போதுமான நிதி பெற்று தரப்படும் என்றார்.