பொன்னமராவதி, செப்.28- புதுக்கோட்டை பொன்னமராவதி முத்தமிழ்ப் பாசறை செயற்குழுக்கூட்டம் பாசறைத்தலைவர் நெ.இரா.சந்திரன் தலைமையில் நடைபெற்றது, அறங்காவலர் குழுத்தலைவர் மருத்துவர் மு.சின்னப்பா, மேனாள் தலைவர்கள் அரு.வே.மாணிக்கவேலு, கி.இரமேசு ஆகியோர் முன்னிலையேற்றனர். துணைத்தலைவர் கோ.பார்த்தசாரதி வரவேற்றார். செயலாளர் பெ.சதாசிவம் நன்றி கூறினார். கூட்டத்தில் மாணவர்களுக்கான பாசறைபட்டயம், தமிழாசிரியர்களுக்கான தொல்காப்பியர் விருது வழங்கும் விழாவை வழக்கம் போல இந்த ஆண்டும் சிறப்பாக நடத்துவது எனவும், அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் இலக்கிய விழா நடத்துவது எனவும் விருது வழங்கும் விழாவிற்கு அறங்காவலர் சுப.த.காமராஜ் விழாக்குழுத் தலைவராகக் கொண்டு விழாவை நடத்துவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் துணைச் செயலாளர்கள் செ.பாலமுரளி, இராம.வீரப்பன், கணேசமூர்த்தி,தகவல்தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் ச.வெங்கடேச குப்தா, அறங்காவலர்கள் அ.தட்சணாமூர்த்தி, இராம.ச.அரசுஇராஜா, மு.ராஜாமுகமது, செயற்குழு உறுப்பினர்கள் ச.சோலையப்பன், அழ.இளையராஜா மற்றும் பலர் பங்கேற்றனர்.